ஜெர்மனி திரையரங்கில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக் கொலை

germanஜெர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது 50 பேர் படுகாயம் அடைந்ததாக அந்த நாட்டை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாகி சூடு நடத்திய நபர் கையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய பெல்ட் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது திரையரங்கு முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

 

இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை ஜெர்மனி போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக, துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்ட நபரை போலீசார் கைது செய்து விட்டதாக கூறப்பட்டது.

 

போலீசார் அந்த மர்ம நபரை சுடுவதற்கு முன்பு, சிலரை அவன் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக செய்திகள் தெரிவித்தன. பிணைக் கைதிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

 

தாக்குதல் நடத்திய நபர் யார் என்றும் என்ன நோக்கத்திற்காக தாக்குதல் நடத்தினான் என்றும் போலீசார் கண்டறியவில்லை.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply