இலங்­கையில் முத­லீடு செய்­யுங்கள் நியூசி­லாந்தில் அழைப்பு விடுத்தார் பிர­தமர் ரணில்

ranilஇந்து சமுத்­தி­ரத்தின் நிதிக் கேந்­திர நிலை­ய­மாக மாற்­ற­ம­டை­ய­வுள்ள இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­களை பெற்றுக் கொள்­ளு­மாறு நியூ­சி­லாந்து, இலங்கை வர்த்­தக சமூ­கத்­தி­ன­ருக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்­பு­வி­டுத்­தி­ருக்­கின்றார்.நியூ­சி­லாந்து சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்­று­முன்­தினம் நியூ­சி­லாந்தின் ஒக்லேன்ட் நகரின் வர்த்­தக மற்றும் முயற்­சிகள் தொடர்­பான நிலை­யத்தில் இடம்­பெற்ற இலங்கை, நியூ­சி­லாந்து வர்த்­தக சமூக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்த மாநாட்டில் பிர­தமர் மேலும் உரை­யாற்­று­கையில்,

சிறிய நாடாக இருந்­தாலும் பெரிய நாடாக இருந்­தாலும் முன்­னேறிச் செல்ல வேண்­டு­மாக இருந்தால் பொரு­ளா­தார சந்­தையும் புதிய உற்­பத்­தி­களும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் வர்த்­தக மற்றும் கைத்­தொழில் சந்­தர்ப்­பங்­களை விரி­வு­ப­டுத்திக் கொள்ளும் நோக்­கி­லேயே நான் நியூ­சி­லாந்­திற்கு மிகவும் வலு­வான குழு­வி­னரை அழைத்து வந்தேன்.

இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யிலும் நிறு­வப்­ப­ட­வுள்ள உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யங்­க­ளி­னூ­டாக இந்த செயற்­பா­டு­களை மேலும் முன்­னேற்றிச் செல்ல முடியும் என நம்­பு­கிறேன். இவ் வருடம் பெப்­ர­வரி மாதம் இலங்கை வந்­தி­ருந்த நியூ­சி­லாந்து பிர­தமர் ஜோன் கீ நியூ­சி­லாந்தின் முத­லீட்­டா­ளர்­களை இலங்­கைக்கு வர­வ­ழைப்­ப­தற்­கான முறைமை தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்தார் என்றார்.

இந்த சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான சகல ரட்­னா­யக்க, ஹரீன் பெர்னான்டோ, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னான்டோ புள்ளே, பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply