ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கியூபா தலைவரின் நினைவஞ்சலி !

maiகியூபாவின் தலைவர் பிடல் கஸ்ரோவுக்கு நினைவஞ்சலி செலுத்தும் முகமான நிகழ்வு நேற்று (02) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஜனாதிபதியினால் பிடல் கஸ்ரோவின் புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததுடன் இதன்போது கியூபாவின் தூதுவர் ஜூவானா எலேனா ரமொஸ் ரொட்ரிகுவெஸ் கலந்து கொண்டிருந்தார்.

ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி கௌரவித்ததுடன் நினைவஞ்சலியின் பிரதான உரையை இலங்கைக்கான கியூபா நட்பு சங்கத்தின் துணை தூதுவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டீ.யூ குணசேகர நிகழ்த்தினார். சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply