பகல் கனவு காணும் ஓ.பி.எஸ்.: நாளை காலை வேட்பாளர் அறிவிப்பு: டி.டி.வி. தினகரன்

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அஇஅதிமுக சின்னம் இரட்டை இலை. அதில் எங்கள் வேட்பாளர்தான் போட்டியிடுவார். ஓ.பன்னீர்செல்வம் உ.பி., கேரளா போன்ற மாநிலங்களில் சுயேட்சை சின்னமாக இருக்கும் இடத்தில் நிற்பார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அவர் பகல் கனவு காண்கிறார். அந்த கனவு என்றென்றைக்கும் பலிக்காது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலோடு ஓ.பன்னீர்செல்வம் அடங்கிவிடுவார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்று அவர் செய்கின்ற அடாதடிகளை விரும்பாமல் திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களே அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் தான் திமுகவில் இருந்து வெளியேற இருக்கிறார்கள். நாளை காலை 10 மணிக்கு ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் கூடி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இவ்வாறு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply