ஐ.எஸ். நிலைகள் மீது எகிப்து இராணுவம் தாக்குதல், 3 தலைவர் உட்பட 19 பேர் பலி

எகிப்தின் வடக்கிலுள்ள சினாய் பிரதேசத்திலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தளமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் அவ்வமைப்பின் தலைவர்கள் 3 பேர் உட்பட 19 பேர் பலியாகியுள்ளதாக எகிப்து பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.இத்தாக்குதல் சம்பவம் குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு எந்தவித அறிவித்தலும் இதுவரை விடுக்காதுள்ளதாக அல்ஜெஸீரா குறிப்பிட்டுள்ளது.

எகிப்தின் நூற்றுக் கணக்கான இராணுவ வீரர்களை கொலை செய்த ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஒரு பிரிவினரான அன்ஸார் பெய்ட் அல்மக்திஸ் பயங்கரவாதிகள் இருந்த பகுதியின் மீது எகிப்து இராணுவம் விமானத் தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply