பொலிஸாரின் வீட்டிலிருந்து சட்டவிரோதமான ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

ஆனமடுவ தென்னன்குரியா பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனையிட்ட போது, அவ்வீட்டிலிருந்து துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக, ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.கல்பிட்டி, நுரைச்சோலையில் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரியின் வீட்டிலிருந்தே, கோடா, கசிப்பு போத்தல் மற்றும் ரி-56 துப்பாக்கி, கைதுப்பாக்கி என்பவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிகளை முன்னாள் அமைச்சர் தமு தசாநாயக்க வீட்டிலிருந்து எடுத்து வந்ததாக, சந்தேகநபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply