கட்டார் – சவுதி அரேபியா இடையேயான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளது

கட்டார் – சவுதி அரேபியா இடையேயான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளது.பெருமளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்கள் வர்த்தகம், குறித்த மார்கத்தினூடாகவே இரு நாடுகளுக்குமிடையே நடைபெற்றுள்ளன.பாதை மூடப்பட்டுள்ள காரணத்தினால், சரக்குகளை ஏற்றிய பாரவூர்திகள் எல்லையில் வரிசையில் காத்திருப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியா மற்றும் அதன் நேச நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர ரீதியிலான உறவுகளை இடைநிறுத்தியுள்ளன.இதனால் ஏற்கனவே வான்வழி மார்க்கம் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply