புதிய அரசியல் கட்சிகளின் பதிவு மேலும் தாமதமாகும்
புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் பற்றிய நேர்முகப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணத்தினாலேயே பதிவுகள் பற்றிய அறிவிப்பு மேலும் தாமதமாகும் என தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
95 புதிய அரசியல் கட்சிகள் பதிவுகளுக்காக விண்ணப்பம் செய்திருந்தன எனவும், அவற்றின் பதிவுகள் பற்றிய அறிவிப்பு மே மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் முன்னர் தெரிவித்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply