எல்­லை­ தாண்­டிய மீன்­பி­டியை மேற்­கொண்டால் கைதுகள் தொடரும்

இலங்கை கடல் எல்­லையில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன்­பி­டியில் ஈடு­பட்டால் கைது செய்­வதை தடுக்க இய­லாது. எமது மீன­வர்­களை பாது­காக்­கவே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என மீன்­பி­டித்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.தடை­செய்­யப்­பட்ட மீன்­டியை நிறுத்­து­மாறு பல சந்­தர்ப்­பங்­களில் நாம் இந்­திய தரப்­பிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இந்­திய அரசும் ஏற்­றுக்­கொண்ட விட­யத்தை தொடர்ந்தும் செய்­ய­வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­து­மீறி இலங்கை கடல் எல்­லைக்குள் பிர­வே­சிக்கும் தமி­ழக மீன­வர்­களை கைது­செய்­வது மற்றும் தண்­டப்­பணம் அற­வி­டப்­படல் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சட்டம் குறித்து இந்­திய தமி­ழக மீன­வர்கள் மற்றும் அர­சியல் வாதிகள் கடு­மை­யான கண்­ட­னத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இந்த சட்­டத்தை உட­ன­டி­யாக நிரா­க­ரிக்க வேண்டும் எனவும், கடற்­ப­டை­யி­னரால் மீன­வர்கள் கைது­செய்­யப்­ப­டு­வதை நிறுத்­தவும் பட­கு­களை உட­ன­டி­யாக விடு­விக்­கவும் வேண்டும் எனவும் கோரி வரு­கின்­றனர். அதேபோல் இரு­நாட்டு மீன­வர்­களும் பொது­வான இடத்தில் மீன்­பி­டிக்கும் வகையில் ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர்ச்­சி­யாக தமி­ழக மீன­வர்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் குறித்த பிரச்­சினை குறித்து வின­வி­ய­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

சட்­ட­வி­ரோ­த­மாக இலங்கை கடல் எல்­லைக்குள் மீன்­பி­டிக்கும் ஏனைய அனைத்து நாட்டு மீன­வர்­க­ளுக்கும் இலங்­கையின் சட்டம் நடை­மு­றையில் இருக்கும். இதில் இந்­தி­யர்­க­ளுக்கு மாத்­திரம் விசேட சலு­கைகள் வழங்­கப்­ப­ட­மு­டி­யாது. எமது வளங்­களை பாது­காக்க வேண்­டி­யதும் எமது மீன் உற்­பத்­தியை பாது­காக்க வேண்­டி­யதும் எமது நாட்டின் கட­மை­யாகும்.

அவ்­வாறு இருக்­கையில் இலங்­கையில் நாம் கொண்­டு­வந்­துள்ள சட்­ட­மா­னது எமது மீன­வர்­களை பாது­காக்­கவும் எமது நாட்டின் மீன் உற்­பத்­தியை அதி­க­ரிக்­கவும் உதவ வேண்­டுமே தவிர ஏனைய நாடு­களின் நலன்­களை மாத்­திரம் கவ­னத்தில் கொள்­ள­மு­டி­யாது. நாம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யுள்ள சட்­ட­மா­னது சட்­ட­வி­ரோ­த­மாக உள்­நு­ழை­வதை தடுக்­கவே தவிர நாடு­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பா­டு­களை உரு­வாக்கும் சட்­ட­மூலம் அல்ல.

இலங்கை கடல் எல்­லைக்குள் சட்­ட­வி­ரோத மற்றும் தடை ­செய்­யப்­பட்ட மீன்­பி­டியை மேற்­கொள்ள வேண்டாம் என தொடர்ச்­சி­யாக நாம் இந்­திய தரப்­பி­ன­ருக்கு வலி­யு­றுத்தி வரு­கின்றோம். இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான மீனவர் பிரச்­சினை தொடர்பில் நாம் பல்­வே­று­மட்ட பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டுள்ளோம். அதன்­போதும் நாம் சட்­ட­வி­ரோத மீன்­பி­டியை தடுக்க வேண்டும் என்­ப­தையே வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.

இந்­திய மத்­திய அர­சாங்கம் அதனை ஏற்­றுக் ­கொண்­டுள்­ளது. அவ்­வாறு இருக்­கையில் மீண்டும் ஒரே தவறை செய்­வது எமது மீன­வர்­களை அதிகம் பாதிக்கும். ஆகவே சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­படும் தமி­ழக மீன­வர்­களை கைது­செய்­வதை தடுக்க முடி­யாது. அதேபோல் பட­கு­களும் தொடர்ந்தும் அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டில் இருக்கும்.

இந்­தியப் பட­கு­களை விடு­விக்­கக்­கோரி ஆரம்­பத்தில் இருந்தே கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாம் 42 பட­கு­களை விடு­தலை செய்­துள்ளோம். எனினும் தொடர்ச்­சி­யாக அவர்­களின் சட்­ட­வி­ரோத நட­வடிக்­கை­களை நாம் அனுமதிப்போம் என ஒருபோதும் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் மீண்டும் அவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்ந்தது. தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த செயற்பாடு களை தடுக்க முடியாது. அத்துடன் பொதுவான ஒரு பிரதேசம் என அடையாளப்படு த்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற் கொள்வது கடினமான செயற்பாடாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply