பெற்றோரின் சமாதியைப் புனரமைக்க அரச பணத்தைச் செலவிட்டாரா கோத்தா?

அம்­பாந்­தோட்­டை­யில் மெத­மு­லன டி.ஏ.ராஜ­பக்ச அருங்­காட்­சி­ய­கம் மற்­றும் உரு­வச் சிலை­களை நிர்­மா­ணிப்­பதற்கு அரச பணத்­தைத் தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­ய­மைக்கு எதி­ரான வழக்கு கோட்டை நீத­ிவான் நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.காணி­களை நிரப்­பும் மற்­றும் அபி­வி­ருத்தி செய்­யும் கூட்­டுத்­தா­ப­னத்­தின் நிதியே இவ்­வாறு செல­விட்­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இது சம்­பந்­த­மாக முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­போ­தி­லும் இது­வரை அவரை வழக்­கில் சந்­தே­க­ந­ப­ரா­கச் சேர்க்­க­வில்லை.

தமது பெற்­றோ­ரின் சமா­தியை நிர்­மா­ணிப்­ப­தற்­காக தனது பொறுப்­பின் கீழ் இருந்த அரச நிறு­வ­னத்­தின் பொதுப்­ப­ணத்­தில் இருந்து 9கோடி ரூபா­வைச் செல­விட்டு, கோத்­த­பாய ராஜ­பக்ச பார­தூ­ர­மான ஊழலை மேற்­கொண்­டுள்­ளார் எனக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

எனி­னும், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தில் உள்ள மூத்த பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வர் கார­ண­மாக கோத்­த­பாய வழக்­கில் இருந்து தப்­பித்து வரு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது.

குற்­றச்­சாட்டுத் தொடர்­பான ஆவ­ணங்­க­ளுக்­குப் பொறுப்­ப­தாக இருக்­கும் இந்­தச் சட்­டத்­த­ரணி, கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் கையெ­ழுத்து தெளி­வாக இல்லை எனக் குறிப்­பிட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply