ஜகத் ஜயசூரியவுக்கு ஆதரவாக அரசாங்கம் செயற்பட வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ

முன்னாளர் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பங்களிப்பு செய்த இராணுவ வீரர்களுக்கு எதிராக அவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கவலையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களும் அதிகமாக குரல்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வாக்களிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply