ஈராக்கில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 52 பேர் பலி
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கடுமையாக போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தை அமெரிக்க படையினரின் உதவியால் ஈராக் தவிடுபொடியாக்கி வருகிறது. ஆனாலும் அவர்கள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி பெருத்த சேதத்தை விளைவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் நாட்டின் திகார் மாகாணத்தில் நசிரியா பகுதியில் சாலையோர உணவகம் ஒன்றில் இன்று தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைந்தான். அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினான். இதைதொடர்ந்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை சாவடியில் அவன் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினான்.
இந்த இரண்டு தாக்குதல்களிலும் சுமார் 52 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ஈரானியர்கள் நான்கு பேர் பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த 91 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply