கணவனும் மனைவியும் சடலங்களாக மீட்பு

அநுராதபுரம், விஹாரஹல்மில்லகுளம் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் கணவனும் மனைவியும் என்று தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாக செய்தியாளர் கூறினார். 

உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவனுடைய மகன் இன்று காலை வீட்டுக்கு வந்த போது சடலங்களை கண்டுள்ளார். உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply