டொனல்ட் டிரம் ஒரு மனநோயாளி, அவரை பதவி நீக்க வேண்டும் : ஜனநாயக கட்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ஒரு மனநோயாளி எனவும், அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்க ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என அக்கட்சியின் பிரதம நிறைவேற்று உறுப்பினரான ஸ்டெயார் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான வாதப் பிரதிவாதங்கள் டிரம்பின் நடவடிக்கையினால் எதிர்வரும் நாட்களில் யுத்தமாக மாறும் நிலைமை ஏற்படும் எனவும் ஸ்டெயார் கூறியுள்ளார்.

டிரம்பினுடைய அறிவிப்புக்கள் அனைத்தும் அவர் ஒரு மனநோயாளி என்பதற்கான அறிகுறிகளேயாகும் எனவும் ஸ்டெயார் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply