இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசாரணை தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சத்தியக் கடதாசிகள் பெற்றுக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பெபரல் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, இது தொடர்பிலான சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply