மாளிகாவத்தையைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி, பொரளையில் சம்பவம்

பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாலந்த வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (19) காலை 9.10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply