போலி கணக்குகளை முடக்க பேஸ்புக் புதிய திட்டம்

பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் 200 கோடிக்கும் அதிகமான கணக்குகளையும் மனிதர்கள் தான் பயன்படுத்துகின்றனரா என்பதை கண்டறிய பேஸ்புக் புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. அதன்படி அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்களது கணக்கை உறுதி செய்ய புகைப்படங்களை சமர்பிக்க நேரிடும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் மூலம் பேஸ்புக் கணக்குகளை உண்மையில் மனிதர்கள் தான் பயன்படுத்துகின்றனரா அல்லது போட் கொண்டு அவை பயன்படுத்தப்படுகிறதா என்பதை பேஸ்புக் கண்டறியலாம் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான துவக்க பணிகளின் ஸ்கிரீன்ஷாட் வெளியானதை தொடர்ந்து பேஸ்புக் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளங்களில் இதுபோன்ற அம்சங்களை ஏற்கனவே செயல்படுத்த இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் இதற்கென ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தையும், மைக்ரோசாஃப்ட் சேவைகளில் விண்டோஸ் ஹெல்லோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் பயணர்களின் முகத்தை கண்டு கணக்குகளை உறுதி செய்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply