கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு டிரம்ப் இரங்கல்
அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத நிலையில் எல் சாண்ட்ரோ அருகேயுள்ள பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 4 கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர்.
அமெரிக்க பாதுகாப்பு படையில் உள்ள மிக நீளமான, அதிக எடை சுமக்கக்கூடிய ஹெலிகாப்டரான இது ‘சிஎச்-இ சூப்பர் ஸ்டாலியன்’ ரகத்தை சேர்ந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 வீரர்கள் பலியானதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply