துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
ஹிக்கடுவ, வெவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபரை ஆரச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதுடைய இனாசி சமிந்த என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் ஆரச்சிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply