ஊடகவியலாளர் சாமர லக்ஷான் குமாரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

சிலுமின மற்றும் ரெச ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான காலஞ்சென்ற சாமர லக்ஷான் குமாரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மதுகம, எதுலத்முதலிகமயில் அமைந்துள்ள இல்லத்திற்கு நேற்று (03) இரவு சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரின் மனைவி நிலுபா தில்ஹானி, மகன் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply