வவுனியாவில் கணவன் மனைவி இருவரும் சடலங்களாக மீட்பு

வவுனியா மாவட்டம் புளியங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி கடிதம் ஒன்றை எழுதிவைத்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடிதத்தில் தமது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல என எழுதப்பட்டிருந்ததாக தடயங்களைக் கைப்பற்றிய பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்கள் எனக் கூறப்படும் குறித்த இளம் தம்பதியின் சடலங்கள் நேற்றுக் காலை புளியங்குளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

இதில் கனகராயன் குளத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கௌதமி ஆகிய இருவருமே மீட்கப்பட்டிருந்தனர்.

உறவினர் வீட்டில் குறித்த இருவரும் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்த விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருவதாக கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply