அரசியல் கைதிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஐ.நாவுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மனு
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுடைய மனு நேற்று ஐக்கியநாடுகள் சயைின் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் கையளிக்கப்பட்டது. தமது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலை வரைக்கும் 4 நாள்களாக நடைபயணம் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா. ஆக்கபூர்வமாகச் செயற்படவேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கோரும் மனு நேற்றுக் கையளிக்கப்பட்டது.
மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனனும் நடைபயணப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் ஐ.நாவின் யாழ். அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று மனுவைக் கையளித்தனர். அரசியல் கைதிகளைாகச் சிறையில் இருக்கும் தம்மைக் குறுகிய மறுவாழ்வு அளித்தாவது விடுவிக்குமாறு கோரி அனுராதபுரம், மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தாயகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் இடம்பெற்றிருந்தன. மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபயணம் மேற்கொண்டார்கள். அவர்களது பயணம் முடிவடைந்த சனிக்கிழமை அலுவலக நாள் இல்லை என்பதால் அனுராதபுரத்திலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் மாணவர்களால் தமது மனுவைக் கையளிக்க முடியவில்லை. இதையடுத்தே நல்லூர் கோயில் வீதியில் உள்ள அலுவலகத்தில் அந்த மனு நேற்றுக் கையளிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply