குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும். இந்த மருந்தின் விலை 40 லட்சம் பிராங்குகள். ஆனால் சுவிட்சர்லாந்து அரசை பொறுத்தவரை எந்த வகை அரிய மருந்தாக இருந்தாலும் ஒரு லட்சம் பிராங்குகளாகவே இருக்க வேண்டும். எனவே இதற்கு அரசின் அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply