கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியரை தூக்கிலிட வேண்டும்

அமைச்சர் ரிஷாத் பதியூதின் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய பகுதியில் நடைபெற்ற கம்பெரலிய திட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், குருணாகலில் கைது செய்யப்பட்ட வைத்தியர், அதிகளவு சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை தொடர்பாகவோ, தாய்மார்களுக்கு தவறான சிகிச்சை செய்தமைக்காகவோ அல்ல அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் குறித்த வைத்தியரை தூக்கிலிட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply