ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தவும் : 55 எம்.பி.க்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு என்பன இணைந்து இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யமாறு ஐ.தே.க.யின் பின்னாசன உறுப்பினர்கள் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மகஜரில் நேற்று (09) மாலை வரையில் 55 ஐ.தே.கட்சியின் எம்.பி.க்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச ஆதரவுக் குழுவினர் இந்த கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.  

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply