ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை கலந்துரையாடல் ஒன்றுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நொச்சியாகமையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதற்கு முன்னரும் இதுபோன்ற கடினமான காலங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. எமது கட்சி மீண்டும் சக்தி பெறுவது வெகு தூரமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply