ஸ்ரீ.சு.க அனைத்து மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களின் அவசர கலந்துரையாடல் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று (04) அழைக்கப்பட்டுள்ளனர்.கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் ஆலோசனைகளை பெறுவது இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் செயற்பட வேண்டிய விதம் குறித்து ஆராய நாளை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடதக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply