கச்சைத்தீவு கடற் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்ட விரோதமானது : இலங்கை கடற்படை

இலங்கைக்கு சொந்தமான கச்சைத்தீவு கடற் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்ட விரோதமானது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கச்சைதீவுக்கு அருகில் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படை தம்மை அச்சுறுத்தி திருப்பி அனுப்பியதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேபோல் 50 க்கும் மேற்பட்ட தமது மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படையினர் சேப்படுத்தியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நாம் கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுர சூரியபண்டாரவிடம் வினவியது.

அதற்கு பதில் வழங்கிய அவர், சர்வதேச கடல் எல்லையை மீறி கச்சைத்தீவு பகுதிக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோமானது என கூறினார்.

இந்திய மீனவர்கள் தமது வலைகளை உலர்தவோ அல்லது ஓய்வெடுக்கவோ கச்சைத்தீவுக்கு வர முடியும் என அவர் தெரிவித்தார்.

எனினும் இதனை விடுத்து தற்போது தமிழக மீனவர்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடல் விதிகளை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக உச்ச அளவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயார் எனவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply