இந்த தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் : ரிஷாத் பதி­யுதீன்

சிறு­பான்மை மக்கள் அனை­வரும் ஓர­ணியில் திரள்­வோ­மே­யானால் சஜித் பிரே­ம­தாச பாரி­ய­ வெற்­றியைப் பெறுவார் எனவும், நியா­யத்­துக்­கும் அநி­யா­யத்­துக்கு­மான இந்தத் தேர்­தலில் நியாயம் ­வேண்டு, நீதி வாழ­வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்துள்ளார்.

கடந்த காலங்­களில் எமது மதஸ்­த­லங்­களை நொருக்­கி­ய­வர்கள், உரி­மை­களைப் பறித்­தெ­டுத்­த­வர்கள், வியா­பா­ர ஸ்தா­ப­னங்­களை நாசப்­ப­டுத்­தி­ய­வர்கள், நிம்­ம­தியைக் கெடுத்­த­வர்கள் அனை­வரும் கோத்­த­பா­ய­வுக்குப் பின்னால் அணி­தி­ரண்­டுள்­ளனர். இவர்­களின் கன­வு­களைச் சிதைப்­ப­தற்­கா­கவே சிறு­பான்மை தலை­வர்­க­ளாகிய நாம் அனை­வரும் ஒன்று பட்­டுள்ளோம்.

இன­வா­தி­களின் சதி­களை முறி­ய­டிப்­ப­தற்கும் தடுப்­ப­தற்கும் நீங்கள் எம்­முடன் கைகோர்த்து சஜித்தை வெல்­ல­வை­யுங்கள். இன­வா­திகள் தமது அணிதான் வெற்றி­பெ­று­மென்று தம்­பட்டம் அடிக்­கின்­றார்கள். நமது சமூ­கத்தை அழிப்­ப­தற்கு அத்­தனை முயற்­சி­க­ளையும் செய்­து­விட்டு இப்­போது வாக்­குக்­கேட்டு வரு­கின்­றார்கள்.

நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்குக் கேட்­க­மு­டி­யாது போய்­விட்­டாலும் நீங்கள் உணர்ந்து வாக்­க­ளி­யுங்கள். சஜித் பிரே­ம­தா­சவை வெல்­ல­வைப்­பதன் மூலம் நமது எதிர்­காலம் நமது மண்ணின் எதிர்­காலம் சிறப்ப­டை­­யும் என்­பதை மறந்­து­விட வேண்டாம்.

சிறு­பான்மை சமூ­கத்தின் ஆத­ரவு இல்லாமல் இந்த நாட்­டிலே ஜனாதி­பதி ஒரு­வரை உரு­வாக்க முடி­யாது என்ற செய்­தியை இன­வா­தி­க­ளுக்கு உணர்த்தும் தேர்­த­லாக எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் அமை­ய­ வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று மன்­னாரில் இடம்­பெற்ற பிர­சா­ரக்­கூட்­டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply