துருக்கியில் எச்சில் துப்பி பீட்சா டெலிவரி செய்தவருக்கு 2½ ஆண்டு ஜெயில்

துருக்கியில் மத்திய அனடோலி பகுதியில் உள்ள எஸ்கிசர் நகரை சேர்ந்தவர் புராக்ஸ். இவர் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டுக்கு சென்று ‘பீட்சா’ டெலிவரி செய்தார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர் தனது அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோவை போட்டு பார்த்தார்.
அதில் இவர் டெலிவரி செய்த பீட்சாவின் மீது எச்சில் துப்பியது பதிவாகி இருந்தது. இது குறித்து புராக்ஸ் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் இவரை கைது செய்து இஸ்தான்புல் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு புராக்ஸ்சுக்கு 2½ ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply