குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்து : 4 பேர் பலி

Monday, February 10th, 2025 at 11:45 (SLT)

தொரடியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​அதே திசையில் பயணித்த மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய மின்தடைக்கான உண்மையான காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

Monday, February 10th, 2025 at 11:40 (SLT)

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை, இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. மொத்த மின்சார உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் சூரிய மின் உற்பத்தியும் முழு மின்சார அமைப்பின் வீழ்ச்சி என்பன, மின்தடைக்கான முதன்மைக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மனிதப் புதைகுழிகளில் இருந்து 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

Monday, February 10th, 2025 at 11:35 (SLT)

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Sunday, February 9th, 2025 at 13:56 (SLT)

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) அதன் வரவேற்பு பீடத்தில் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்புகளை செய்யவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அதிகாலையில் வந்த தொலைபேசி, எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார் : நாமல் ராஜபக்ச

Sunday, February 9th, 2025 at 13:53 (SLT)

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மின் தடைக்கான காரணம் வெளியானது

Sunday, February 9th, 2025 at 13:47 (SLT)

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம்

Sunday, February 9th, 2025 at 13:45 (SLT)

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது

Sunday, February 9th, 2025 at 13:43 (SLT)

கோனகங்கார பொலிஸ் பிரிவில் கடந்த 05 நாட்களாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று சனிக்கிழமை (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32 ஆயிரத்து 380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுரகுமார மக்களை தூண்டிவிடுவதற்காக தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது : உதய கம்மன்பில

Sunday, February 9th, 2025 at 8:03 (SLT)

அரசியல் பழிவாங்களுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பையும் பயன்படுத்துகிறது. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலங்களில் பலர் கைதாகலாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும் :சிவஞானம் ஸ்ரீதரன்

Sunday, February 9th, 2025 at 7:57 (SLT)

மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இன்றைய காலநிலை பற்றிய தகவல்கள்

Sunday, February 9th, 2025 at 7:47 (SLT)

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Sunday, February 9th, 2025 at 7:43 (SLT)

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Saturday, February 8th, 2025 at 13:29 (SLT)

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை : ஹேஷா விதானகே

Saturday, February 8th, 2025 at 13:28 (SLT)

ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து வெளிக்கொண்டு வந்து அவர்களை முழுமையான சுதந்திரத்துடன் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

Saturday, February 8th, 2025 at 13:25 (SLT)

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>