கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு

Saturday, February 8th, 2025 at 7:46 (SLT)

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு : இந்திய வெளியுறவுத் துறை தகவல்

Saturday, February 8th, 2025 at 7:41 (SLT)

இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதிலளித்துள்ளாா்.

மேலும் வாசிக்க >>>

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

Saturday, February 8th, 2025 at 7:33 (SLT)

புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திறகு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் நுவரெலியாவில் உறைபனி பெய்ய வாய்ப்பு

Saturday, February 8th, 2025 at 7:30 (SLT)

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸார் முன்னிலையில் சாரதி செய்த காரியம்

Saturday, February 8th, 2025 at 7:25 (SLT)

வவுனியாவில் க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக உதிரிப் பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று (07) இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தை பார்த்து வேதனையடைந்தேன் , நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் உறுதி : பிரதமர்

Friday, February 7th, 2025 at 20:46 (SLT)

லசந்தவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம் எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசணை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். லசந்த விக்கிரமசிங்கவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருக்கிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

Friday, February 7th, 2025 at 20:44 (SLT)

தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையில் எஞ்சியுள்ளதை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

தந்தையின் செயலால் மகன் பரிதாப மரணம்

Friday, February 7th, 2025 at 7:49 (SLT)

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக வீட்டுக்கு பெறப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் வாசிக்க >>>

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Friday, February 7th, 2025 at 7:43 (SLT)

எத்திமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலொன்ஆர பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எத்திமலை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (06) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

Friday, February 7th, 2025 at 7:39 (SLT)

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர் புதன்கிழமை (05) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை தெரிவு செய்துவிட்டார்கள் அவர்களால் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை : இராமநாதன் அச்சுனா

Friday, February 7th, 2025 at 7:36 (SLT)

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும் : இராதாகிருஷ்ணன் எம்.பி.

Friday, February 7th, 2025 at 7:30 (SLT)

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம். 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும். இல்லையேல் விவாகரத்துக்கு செல்ல நேரிடும் .காதலிக்கும் போது காதலிக்கு பல வாக்குறுதிகளை வழங்கலாம் ஆனால் திருமணத்துக்கு பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியான்மர் அரசுக்கு ஏமாற்றம்

Thursday, February 6th, 2025 at 10:44 (SLT)

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.

மேலும் வாசிக்க >>>

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் : யாழ்.ஊடக அமையம்

Thursday, February 6th, 2025 at 10:39 (SLT)

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எஹலியகொடை கொலைச் சம்பவம் : இரண்டு சந்தேகநபர்கள் கைது

Thursday, February 6th, 2025 at 10:32 (SLT)

இரத்தினபுரி, எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொட பகுதியில் கடந்த 17 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து இருவரைப் பலத்த காயங்களுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>