கிளிநொச்சியில் நடந்து சென்ற குடும்பஸ்தரை மோதிய பேருந்து :பரிதாபமாக உயிரிழப்பு

Wednesday, February 12th, 2025 at 7:52 (SLT)

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுர மற்றும் பல அரச தலைவர்களுக்கு இடையில் சந்திப்புகள்

Wednesday, February 12th, 2025 at 7:48 (SLT)

2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு

Tuesday, February 11th, 2025 at 10:03 (SLT)

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்

Tuesday, February 11th, 2025 at 9:58 (SLT)

கடந்த மாதம் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதோடு அதற்குள் இருந்த 15 மீனவர்களை சிறைபிடித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மாகாணசபை முறைமை தமிழர்கள் வென்றெடுத்த உரிமை : அதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது

Tuesday, February 11th, 2025 at 9:55 (SLT)

மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடலாம் : உதய கம்மன்பில

Tuesday, February 11th, 2025 at 9:49 (SLT)

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் மாத்திரமே சவாலுக்குட்படுத்த முடியும். சட்டமா அதிபரை அச்சுறுத்தி சட்டத்தின் ஆட்சியை மலினப்படுத்த வேண்டாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

திருடர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா? : ஹிருணிகா

Tuesday, February 11th, 2025 at 9:45 (SLT)

திருடர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறிக்கொள்ளும் நாமே திருடர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது எமது எதிர்கால அரசியல் பயணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது

Tuesday, February 11th, 2025 at 9:41 (SLT)

டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்த நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டொன் பிரியசாத் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

காலி, இரத்தினபுரி பகுதியில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் 

Tuesday, February 11th, 2025 at 9:35 (SLT)

நாட்டில் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தென்னை பயிர்ச் செய்கையில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தினார்

Tuesday, February 11th, 2025 at 9:23 (SLT)

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தியதுடன், வடக்கில் புதிதாக தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தையிட்டி விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு : டக்ளஸ்

Monday, February 10th, 2025 at 14:04 (SLT)

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மேலும் வாசிக்க >>>

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு : தம்பதி கைது

Monday, February 10th, 2025 at 14:00 (SLT)

ஹொரணை, போருவதன்ட பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த தலிபான்கள் : ஒலிபரப்பிற்கு தடை

Monday, February 10th, 2025 at 13:57 (SLT)

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்கள் ஒரேயொரு வானொலி நிலையத்திற்குள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தலிபான்கள் அந்த வானொலி சேவையை தடை செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்

Monday, February 10th, 2025 at 11:50 (SLT)

இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார்.ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்ட மீட்பு

Monday, February 10th, 2025 at 11:48 (SLT)

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>