மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்று

Sunday, February 2nd, 2025 at 8:46 (SLT)

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் சிரேஷ்ட தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

Sunday, February 2nd, 2025 at 8:41 (SLT)

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

Sunday, February 2nd, 2025 at 8:37 (SLT)

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Saturday, February 1st, 2025 at 13:38 (SLT)

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இந்நாட்டிற்கு வந்த சந்தேக நபர் ஒருவரும் மற்றும் குறித்த கடத்தலுக்கு உதவிய மற்றும் துணை போன சந்தேக நபர் ஒருவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு

Saturday, February 1st, 2025 at 13:36 (SLT)

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கிச் சூடு : மூவர் பலி

Saturday, February 1st, 2025 at 8:09 (SLT)

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

டிக்டொக் காணொளிக்காக தமது மகளை கௌரவக் கொலை செய்த பாகிஸ்தானிய தந்தை

Saturday, February 1st, 2025 at 8:04 (SLT)

அமெரிக்காவிலிருந்து(USA) அண்மையில் பாகிஸ்தானுக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்த ஒருவர், தனது மகளின் டிக்டொக் காணொளிகளை ஏற்காமையால், அவரை கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்

Saturday, February 1st, 2025 at 8:00 (SLT)

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் வானிலையில் நாளை முதல் மாற்றம்

Saturday, February 1st, 2025 at 7:55 (SLT)

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது , மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் : எஸ்.பி.திசாநாயக்க

Friday, January 31st, 2025 at 9:17 (SLT)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. காலி முகத்திடல் அரகலய பூமியில் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு கடவுச்சீட்டை இணையவழியில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு 

Friday, January 31st, 2025 at 9:13 (SLT)

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

Friday, January 31st, 2025 at 9:10 (SLT)

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆற்றுக்குள் வீழ்ந்து வயோதிபர் மரணம்

Friday, January 31st, 2025 at 9:06 (SLT)

பண்டாரகம – குங்கமுவ பிரதேசத்தில் ஆற்றில் வீழ்ந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொள்கலன்கள் சட்ட விதிமுறைப்படியே விடுவிப்பு மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் சாட்சியங்களுடன் முறைப்பாடு செய்ய முடியும் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Friday, January 31st, 2025 at 6:45 (SLT)

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். ஆனால் இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சியினர் மேல் மாகாண ஆளுநருக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையே முன்னெடுத்துள்ளனர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா : சி.வி.கே.சிவஞானம்

Friday, January 31st, 2025 at 6:39 (SLT)

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>