யாழில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

Tuesday, February 4th, 2025 at 12:43 (SLT)

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் சோமசுந்தரம் அவினியு வீதியில் இருந்து மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Tuesday, February 4th, 2025 at 12:39 (SLT)

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று (03) ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் பாராளுமன்ற உப அமைச்சர் இகுஇனா அகிகோ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரால் கைசாத்திடப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

Tuesday, February 4th, 2025 at 12:34 (SLT)

யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Tuesday, February 4th, 2025 at 10:00 (SLT)

வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் இலக்கை அடைந்து, நாட்டில் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் : சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Tuesday, February 4th, 2025 at 9:53 (SLT)

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : பல மாற்றங்களுடன் ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்

Tuesday, February 4th, 2025 at 9:50 (SLT)

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

அர்த்தமுள்ள மாற்றத்துக்காக அனைவருக்கும் இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : பிரதமர்

Tuesday, February 4th, 2025 at 9:45 (SLT)

இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளில், நாம் அடையாளக் கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்று, ஓர் அர்த்தமுள்ள மாற்றத்துக்காக – உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Tuesday, February 4th, 2025 at 9:39 (SLT)

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளையன்றி, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்

Tuesday, February 4th, 2025 at 9:35 (SLT)

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சற்று முன்னர் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் விசேட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன காலமானார்

Monday, February 3rd, 2025 at 9:20 (SLT)

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Monday, February 3rd, 2025 at 9:16 (SLT)

வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11 ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மாவையின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் : தமிழ்த் தேசியக் கட்சி பிரதிநிதிகள்

Monday, February 3rd, 2025 at 9:12 (SLT)

தமிழ் மக்களின் இலக்கினை அடைவதற்கான தமிழ்த் தேசியக் கட்சிகிளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபரொருவர் கைது

Monday, February 3rd, 2025 at 9:06 (SLT)

விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 101 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபரொருவர் திங்கட்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வரவு – செலவு திட்டத்தின் மூலம் கல்வி சேவையாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்குங்கள் : ரோஹிணி கவிரத்ன

Monday, February 3rd, 2025 at 9:02 (SLT)

அதிபர், ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவையில் மூன்றில் இரண்டு பங்பு சம்பளத்தையும், ஏனைய அனைத்து கல்வித்துறையுடன் தொடர்டபுடைய அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொதுஜன பெரமுனவின் கிராமத்துக்கு கிராமம் பொதுமக்கள் சந்திப்பு இன்று அநுதாரபுரத்தில்

Sunday, February 2nd, 2025 at 8:49 (SLT)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘கிராமத்துக்கு கிராமம்’ பொதுமக்கள் சந்திப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை (2) அநுராதபுரம் நொச்சியாக பகுதியில் முன்னெடுக்கவுள்ளது.

மேலும் வாசிக்க >>>