மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம் : வசந்த சமரசிங்க

Friday, January 31st, 2025 at 6:35 (SLT)

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

காலியில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி

Friday, January 31st, 2025 at 6:30 (SLT)

காலி ஹினிதும பனங்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல்

Thursday, January 30th, 2025 at 11:10 (SLT)

மாவை சேனாதிராசாவின் பூதவுடல் , யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு காலமானார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு

Thursday, January 30th, 2025 at 11:07 (SLT)

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காலமாகியுள்ளார்

மேலும் வாசிக்க >>>

நான் பிரதமரானால் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வேன் : கனேடிய கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ் உறுதி

Thursday, January 30th, 2025 at 11:04 (SLT)

அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்:அநுர குமார திசாநாயக்க

Thursday, January 30th, 2025 at 11:01 (SLT)

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 33 பேர் கைது

Thursday, January 30th, 2025 at 10:59 (SLT)

பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ஆறு விபச்சார விடுதிகளிலிருந்து 22 பெண்கள் உட்பட 33 பேர் நேற்று புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

காலமான மாவை சேனாதிராஜா : ஒரு பார்வை

Thursday, January 30th, 2025 at 10:56 (SLT)

யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார். அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல்

Thursday, January 30th, 2025 at 10:54 (SLT)

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் திடீர் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்

Thursday, January 30th, 2025 at 10:51 (SLT)

கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்

Thursday, January 30th, 2025 at 10:50 (SLT)

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து

Thursday, January 30th, 2025 at 10:48 (SLT)

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.கன்சாஸிலிருந்து வந்த விமானத்தில் பணியாளர்கள் உள்ளிட்ட 64 பேர் பயணித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

Wednesday, January 29th, 2025 at 23:00 (SLT)

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று (29) காலமானார்.குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா:கைது

Wednesday, January 29th, 2025 at 16:50 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு புதுச்சேரி அமைச்சர் கடும் கண்டனம்

Wednesday, January 29th, 2025 at 10:22 (SLT)

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>