வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு

Tuesday, January 21st, 2025 at 10:12 (SLT)

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐ.தே.க. செயற்குழுவில் ஏகமனதாக ஆதரவு : ராஜித்த சேனாரத்ன

Tuesday, January 21st, 2025 at 10:01 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதியை வழங்கியுள்ளது. கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா: உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

Tuesday, January 21st, 2025 at 9:57 (SLT)

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இதற்கான உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் 55 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

Tuesday, January 21st, 2025 at 9:52 (SLT)

நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் பெரிய மற்றம் நடுத்தர நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 55 நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதோடு, 60 க்கும் மேற்பட்ட குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

Tuesday, January 21st, 2025 at 4:18 (SLT)

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் அவர் இப்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

Monday, January 20th, 2025 at 9:45 (SLT)

எஹலியகொட – தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றின் குளியலறையில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் நேற்று (19) எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மொரட்டுவ காவல் நிலையத்திற்கு அருகில் பதற்றம்

Monday, January 20th, 2025 at 9:41 (SLT)

100க்கும் மேற்பட்டோர் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால்கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இன்றைய வானிலை

Monday, January 20th, 2025 at 9:25 (SLT)

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து : 14 பேர் காயம்

Monday, January 20th, 2025 at 9:21 (SLT)

சேருநுவர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர – கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (20) காலை குறித்த பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை எனக்கு வீடு வேண்டாம் : ஜனாதிபதி

Monday, January 20th, 2025 at 9:12 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம். அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனம் ஒன்றிணைந்து சூரிய சக்தி மின்நிலையம் ஸ்தாபிக்கப்படும் : ஜனாதிபதி

Monday, January 20th, 2025 at 9:08 (SLT)

சம்பூர் பகுதியில் சூரிய சக்தி மின்நிலையம் ஸ்தாபிக்கப்படும். இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனத்தை ஒன்றிணைத்து நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இரு தரப்பினருக்கும் 50 இக்கு 50 என்ற அடிப்படையில் உரிமம் சொந்தமாகும். அடுத்த அமைச்சரவையில் அதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் திருகோணமலை எண்ணெய் தாங்களிகளில் 61 தாங்கிகளை இந்திய கூட்டு நிறுவனத்துடன் அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியா எமது நண்பன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச தரத்தில் புதிய கோல்ஃப் மைதானம் சீகிரியாவில்

Sunday, January 19th, 2025 at 10:37 (SLT)

சர்வதேச தரத்திற்கு இணங்க சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் கட்டப்பட்ட புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல்(‘Eagles Citadel golf Course’) , (ஜனவரி 17, 2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா அவர்களினால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

Sunday, January 19th, 2025 at 10:34 (SLT)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Sunday, January 19th, 2025 at 10:26 (SLT)

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெண் மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி: கொல்கத்தா நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Sunday, January 19th, 2025 at 10:22 (SLT)

பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடூமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

மேலும் வாசிக்க >>>