மழையுடனான வானிலை தொடரும்

Sunday, January 19th, 2025 at 10:17 (SLT)

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தோஹாவில் போராளிகளின் ஒன்று கூடல்

Sunday, January 19th, 2025 at 10:13 (SLT)

யுத்த நிறுத்தம் ஆரம்பமாகுவதற்கு சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் கட்டாரின் தலைநகர் தோஹாவில் ஒன்று கூடிய பலஸ்தீன போராட்டக் குழுக்களின் பிரதிநிதிகள்.


மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது

Sunday, January 19th, 2025 at 0:46 (SLT)

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சீன விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

Saturday, January 18th, 2025 at 7:21 (SLT)

சீன-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.


ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட “சமஷ்டியே” தேவை!

Saturday, January 18th, 2025 at 7:15 (SLT)

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

மேலும் வாசிக்க >>>

எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் கனடிய அரசாங்கம்

Friday, January 17th, 2025 at 9:10 (SLT)

எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி

Friday, January 17th, 2025 at 9:02 (SLT)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே இன்று (17) காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் வாசிக்க >>>

மின்சாரக் கட்டணம் தொடர்பில் இன்று இறுதி முடிவு

Friday, January 17th, 2025 at 8:58 (SLT)

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்திருந்தது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் : மீனவர்களை ஏமாற்ற சிலர் முயற்சி : முன்னாள் அமைச்சர் டக்ளஸ்

Friday, January 17th, 2025 at 7:02 (SLT)

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார்.

மேலும் வாசிக்க >>>

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

Friday, January 17th, 2025 at 6:56 (SLT)

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் 16ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சவுதி தூதுவர் : பிரதமர் சந்திப்பு

Thursday, January 16th, 2025 at 18:32 (SLT)

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர், காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பு இன்று வியாழக்கிழமை 16 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, ​​இருநாடுகளுக்கும் இடையிலான பொது நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி : இருவர் படுகாயம்

Thursday, January 16th, 2025 at 18:29 (SLT)

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம்(16.01) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பலர் காயம்

Thursday, January 16th, 2025 at 18:25 (SLT)

தங்காலை – வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மல்லாவியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை 

Thursday, January 16th, 2025 at 18:22 (SLT)

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் வியாழக்கிழமை (15) தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு : ரோஹிணி கவிரத்ன எம்.பி

Thursday, January 16th, 2025 at 9:20 (SLT)

தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின் இத்தகைய அறிவிப்பானது அடிப்படையற்றதும் இயலாமையை மறைக்கும் செயல் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>