அனைத்து பெண்களுக்கும் அண்ணனாக துணை நிற்பேன் : த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

Monday, December 30th, 2024 at 10:48 (SLT)

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பில் மன வேதனை அடைந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மன் அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரின துணை : எலான் மஸ்கின் கருத்தால் பரபரப்பு

Monday, December 30th, 2024 at 10:44 (SLT)

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பிரபல ஜேர்மனி அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரினச் சேர்கையாளர் இருப்பதாக உலகின் முதல்நிலை செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஓய்வு பெறுகின்றார் ஜெனரல் ஷவேந்திர சில்வா

Monday, December 30th, 2024 at 10:40 (SLT)

ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியிலிருந்தும், இலங்கை இராணுவத்தில் இருந்தும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (29) தெரிவித்துள்ளது. எனினும், புதிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி தொடர்பில் அமைச்சகம் தகவல் வெளியிடவில்லை.

மேலும் வாசிக்க >>>

அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

Monday, December 30th, 2024 at 10:36 (SLT)

இன்று (30) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் வாசிக்க >>>

அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்துக்கு அமைய தொழிற்படையை கட்டியெழுப்புவதே நாட்டுக்கு தேவை : பிரதமர்

Sunday, December 29th, 2024 at 11:50 (SLT)

அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்துக்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிபெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டுக்கு தேவையானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரயிலில் மோதி நபரொருவர் மரணம்

Sunday, December 29th, 2024 at 11:45 (SLT)

மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் : ஐவர் கைது

Sunday, December 29th, 2024 at 10:55 (SLT)

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

மேலும் வாசிக்க >>>

மற்றுமொரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது : 85 பேர் உயிரிழப்பு 

Sunday, December 29th, 2024 at 10:53 (SLT)

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் திகதியை உறுதி செய்தார் ஜனாதிபதி

Sunday, December 29th, 2024 at 6:54 (SLT)

ஜேர்மன் ஜனாதிபதி ஜேர்மன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன், தேர்தல் திகதியையும் உறுதி செய்துள்ளார்.ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் ஜேர்மன் ஜனாதிபதியான ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மெயர்.

மேலும் வாசிக்க >>>

தாதி வன்புணர்வு: காதலன் உட்பட மூவர் கைது

Sunday, December 29th, 2024 at 6:50 (SLT)

நாவுல – வெல்கால பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அஜர்பைஜான் விமான விபத்து: காரணத்துடன் மன்னிப்பு கோரிய புடின்

Sunday, December 29th, 2024 at 6:47 (SLT)

அஜர்பைஜான் எயார்லைன்ஸ் விமான விபத்திற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறாமல், அஜர்பைஜான் ஜனாதிபதியிடம், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Sunday, December 29th, 2024 at 6:40 (SLT)

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

Saturday, December 28th, 2024 at 13:53 (SLT)

கொட்டாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொலை மருமகன் தப்பியோட்டம்

Saturday, December 28th, 2024 at 13:49 (SLT)

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

50 தொன்களால் அதிகரிக்கும் குப்பை

Saturday, December 28th, 2024 at 13:46 (SLT)

பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>