வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா

Tuesday, September 24th, 2024 at 10:36 (SLT)

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்பு

Tuesday, September 24th, 2024 at 10:33 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்: இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

Tuesday, September 24th, 2024 at 10:27 (SLT)

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹெஸ்பொல்ல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருவதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் அச்சத்தில் மக்கள்

Tuesday, September 24th, 2024 at 10:22 (SLT)

ஜப்பானின் இசு தீவுகளுக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத் தீவில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதல்: 492 பேர் உயிரிழப்பு

Tuesday, September 24th, 2024 at 10:18 (SLT)

லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

மேலும் வாசிக்க >>>

இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது?: டிசம்பருக்குள் பொது தேர்தல்

Tuesday, September 24th, 2024 at 10:15 (SLT)

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என்றும், எதிர்வரும் டிசம்பருக்குள் பொது தேர்தல் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பதவி விலகியிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கு நோக்கி : டக்ளஸ் தேவானந்தா

Monday, September 23rd, 2024 at 10:50 (SLT)

மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் சுயாட்சி !என்ற எமது அரசியல் இலக்கு நோக்கி… மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில்:-

மேலும் வாசிக்க >>>

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த தினேஷ் குணவர்தன

Monday, September 23rd, 2024 at 10:43 (SLT)

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

Monday, September 23rd, 2024 at 10:41 (SLT)

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்தப்படமாட்டாது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

Monday, September 23rd, 2024 at 7:20 (SLT)

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பையடுத்து நேற்று முன்தினம்(21) இரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று(22) நண்பகல் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அது நீடிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இரண்டு பெண்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை வழங்கிய : வட கொரிய

Monday, September 23rd, 2024 at 6:51 (SLT)

வட கொரிய அரசு சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலடப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி செல்ல வைக்க உதவி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2023 அக்டோபர் மாதம் சீனாவால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட சுமார் 500 வட கொரியர்களில் 39 வயதான ரி மற்றும் 43 வயதான காங் என இருவரும் அடங்குவர்.

மேலும் வாசிக்க >>>

நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன் : அனுரவுக்கு ரணில் மடல்

Sunday, September 22nd, 2024 at 20:36 (SLT)

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது : நன்றிதெரிவித்த அனுர குமார திஸ்ஸநாயக்க

Sunday, September 22nd, 2024 at 20:29 (SLT)

பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகும். இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் நூறாயிரக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சி. உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது என தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க வெற்றி : உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Sunday, September 22nd, 2024 at 20:25 (SLT)

நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

Sunday, September 22nd, 2024 at 12:35 (SLT)

ஜனாதிபதி தேர்தல் முடிவு

Live Sri Lanka Presidential Election Results 2024 | Real-Time Results (elections.gov.lk)