பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது : எம்.ஏ.சுமந்திரன்

Saturday, October 25th, 2025 at 10:55 (SLT)

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உடலில் மிளகாய்ப் பொடி தடவப்பட்ட நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Saturday, October 25th, 2025 at 10:51 (SLT)

மினுவாங்கொடை – யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Saturday, October 25th, 2025 at 10:47 (SLT)

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

Saturday, October 25th, 2025 at 10:43 (SLT)

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நானுஓயாவில் வீடு புகுந்து நகை, பணம் திருடியவருக்கு விளக்கமறியல்

Saturday, October 25th, 2025 at 7:39 (SLT)

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் பணத்தையும் திருடிய சந்தேக நபரை 2025 நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் கடந்த நேற்று (24.10.2025) உத்தரவிட்டார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு : இளைஞன் படுகாயம்

Saturday, October 25th, 2025 at 7:36 (SLT)

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாவனையற்ற 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கி மீண்டும் சேவையில்

Friday, October 24th, 2025 at 18:03 (SLT)

இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்கள் நவீனமயமாக்கப்பட்டு, இந்த வாகனங்கள் இன்று (24) முதல் இராணுவ சேவையில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கிளீன் ஶ்ரீ லங்கா திட்டத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் இராணுவ சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெரும் தொகை அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

நைஜீரியாவில் சோகம்: பெட்ரோல் ஏற்றிச்சென்ற லொறி வெடித்து 39 பேர் பலி

Friday, October 24th, 2025 at 18:03 (SLT)

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெற்றோல் ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளாகியதில் 39 பேர் பலியானார்கள்.நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள வீதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

மேலும் வாசிக்க >>>

பாவனையற்ற 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கி மீண்டும் சேவையில்

Friday, October 24th, 2025 at 18:00 (SLT)

இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்கள் நவீனமயமாக்கப்பட்டு, இந்த வாகனங்கள் இன்று (24) முதல் இராணுவ சேவையில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கிளீன் ஶ்ரீ லங்கா திட்டத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் இராணுவ சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெரும் தொகை அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

மிதிகம லசா படுகொலை துப்பாக்கிதாரிகளை கைதுசெய்ய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

Friday, October 24th, 2025 at 12:32 (SLT)

“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகளை கைதுசெய்ய பல வீதிகளில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

பெக்கோ சமானுக்கு சொந்தமான 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல்

Friday, October 24th, 2025 at 12:27 (SLT)

பெக்கோ சமனுக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபா பெறுமதிமிக்க 2 சொகுசு பேருந்துகள் பொலிஸ் குற்றவரும்படிகள் விசாரணைப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Friday, October 24th, 2025 at 12:23 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

Friday, October 24th, 2025 at 12:20 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

Friday, October 24th, 2025 at 12:13 (SLT)

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty) அருகில் கடலில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு

Friday, October 24th, 2025 at 12:10 (SLT)

‘Lemon’ என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ வால் நட்சத்திரத்தை தற்போது மாலை வானில் இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும்.

மேலும் வாசிக்க >>>