அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு விடுத்துள்ள “நரகம் மழையாய் பொழியும்” என்ற 48 மணி நேர இறுதி எச்சரிக்கையை ரஷ்யா வன்மையாகக் கண்டித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், தனது ஈரானிய சகா அப்பாஸ் அராக்சியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா உடனடியாக தனது “மிரட்டல் மற்றும் இறுதி எச்சரிக்கை மொழியை” (Language of Ultimatums) கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்தகைய ஆவேசமான போக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் ஒரு பாரிய போரை நோக்கித் தள்ளும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>
















