பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பலர் பலி

Wednesday, October 1st, 2025 at 10:32 (SLT)

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (30) இரவு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஒலுவிலில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு : பெற்றோர் கைது

Wednesday, October 1st, 2025 at 10:27 (SLT)

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றார்:சிவஞானம் சிறிதரன்

Wednesday, October 1st, 2025 at 7:48 (SLT)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை (30) ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச குழந்தைகள் மற்றும் முதியோர் தினம் இன்று

Wednesday, October 1st, 2025 at 7:37 (SLT)

உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது.”அன்பால் பாதுகாக்கவும் – உலகை வெல்வதற்கு” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ” தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Wednesday, October 1st, 2025 at 7:33 (SLT)

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மாணவர்களுக்கு Gemini மற்றும் AI கருவிகள் இலவசம்

Tuesday, September 30th, 2025 at 11:01 (SLT)

இலங்கை மாணவர்களுக்கு Google அதன் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான ‘Gemini’ உள்ளிட்ட AI தொழில்நுட்ப சேவைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

Tuesday, September 30th, 2025 at 10:58 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது

Tuesday, September 30th, 2025 at 10:55 (SLT)

இந்தியாவின் பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.


காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம்

Tuesday, September 30th, 2025 at 10:53 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Tuesday, September 30th, 2025 at 10:49 (SLT)

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மின்சார சபையின் நட்டம் தொடர்பில் கோப் குழு வௌியிட்ட தகவல்

Tuesday, September 30th, 2025 at 10:46 (SLT)

2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சாரசபை 594,368 மில்லியன் ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை : ஜனாதிபதி

Monday, September 29th, 2025 at 10:29 (SLT)

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

காருடன் நேருக்கு நேர் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் பலி

Monday, September 29th, 2025 at 10:26 (SLT)

தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொள்ளுப்பிட்டி – கடுவெல வீதியின் தலஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் செய்யும் கைது நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் : பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

Monday, September 29th, 2025 at 10:24 (SLT)

நாட்டை திரைப்படம் போலவேதான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏங்கேயோ ஓரிடத்தில் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப்பார்த்து எமது மக்களும் திருடர்களைக் கைது செய்கின்றாரகள், திருடர்களை சிறையிலே அடைத்து விடுகின்றார்கள் என சந்தோசப்படுகின்றார்கள். அது எங்களுக்கும் சந்தோசம்தான் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அதிகளவு போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் மேல் மாகாண மாணவர்கள்

Monday, September 29th, 2025 at 10:22 (SLT)

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>