சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது

Saturday, October 4th, 2025 at 9:10 (SLT)

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாங்குளம் பகுதியில், செட்டிகுளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் பாவனை சமுதாயத்துக்கு சவால்

Friday, October 3rd, 2025 at 11:22 (SLT)

இஸ்லாம் மானிடரை ஆரோக்கியம் உள்ள மனிதர்களாக வாழ்வதையே விரும்புகிறது. இதற்காக மனித உடம்பை திடகாத்திரமாகவும் பிணிகள் ஏற்படாத வகையிலும் பேணவும் வழிமுறைகளை காட்டித் தந்துள்ளது. அதை பின்பற்றுவதே சிறந்தது. இதற்கு மாறாக இன்று உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய போதைப் பொருள் பாவனை சமுதாயத்துக்கு சவாலாக உள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தலைமையில் சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு

Friday, October 3rd, 2025 at 11:19 (SLT)

சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS) நேற்று (02) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

Friday, October 3rd, 2025 at 11:16 (SLT)

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒரு கோடி பெறுமதியான ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

Friday, October 3rd, 2025 at 11:14 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நான்கு கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

Friday, October 3rd, 2025 at 11:11 (SLT)

சட்டவிரோத தங்கக் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களும் தங்கக் தொகையும் கைது செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Friday, October 3rd, 2025 at 11:09 (SLT)

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் இன்று மதுபானக் கடைகள் மூடப்படுகின்றது

Friday, October 3rd, 2025 at 11:05 (SLT)

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (ஒக்டோபர் 3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கலால் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

Friday, October 3rd, 2025 at 11:01 (SLT)

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க இடமளிக்கக்கூடாது : கே.பி. தசநாயக்க

Thursday, October 2nd, 2025 at 10:32 (SLT)

ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடு திரும்பினார் ஜனாதிபதி 

Thursday, October 2nd, 2025 at 10:26 (SLT)

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளார்.செப்ரெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும் வாசிக்க >>>

சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ நிபுணர் குழு நியமனம்

Thursday, October 2nd, 2025 at 7:48 (SLT)

நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில், நேற்று (01.10.2025) இக்குழுவின் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கிளிநொச்சி முகமாலையில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு

Thursday, October 2nd, 2025 at 7:45 (SLT)

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியபோது, ஆபத்தான குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியத்தில் விபத்து : இருவர் உயிரிழப்பு

Wednesday, October 1st, 2025 at 10:40 (SLT)

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

‘டிங்கர்’ இலங்கை அழைத்து வரப்பட்டார்

Wednesday, October 1st, 2025 at 10:37 (SLT)

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>