ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்

Monday, August 25th, 2025 at 12:20 (SLT)

கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை தொடர்பில் மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன : பிமல் ரத்நாயக்க

Monday, August 25th, 2025 at 10:46 (SLT)

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழப்பு

Monday, August 25th, 2025 at 10:44 (SLT)

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

டியூசன் செல்வதாக பொய் சொல்லிவிட்டு சென்ற, 2 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

Monday, August 25th, 2025 at 10:42 (SLT)

டியூசன் செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு, பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல் போன 2 மாணவர்களும் கல்பான மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

Monday, August 25th, 2025 at 10:38 (SLT)

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாராளுமன்றத்திற்கு தீ வைக்க சென்றவர்கள் பொதுச்சொத்தை பாதுகாப்பதா? : சம்பிக்க ரணவக்க

Monday, August 25th, 2025 at 8:10 (SLT)

பாராளுமன்றத்திற்கு தீ வைப்பதாக வீதிக்கு இறங்கிய கட்சியினர், பொதுச் சொத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருப்பது நகைப்புக்குரிய விடயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கிழக்கில் தமிழர் இனழிப்பின் ஆரம்ப புள்ளி : அழிக்கப்பட்டடு காணாமல்போன அம்பாறை வயலூர் கிராமத்தின் 40 வருட நிறைவு

Monday, August 25th, 2025 at 8:07 (SLT)

அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் முதல் 1985- ஓகஸ்ட் 24 ம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும் தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம். என்பதுடன் இந்த இனஅழிப்பின் 40 வருட நினைவு தினம் 24-8-2005 ஞாயிற்றுக்கிழமை. ஆகும்.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலாத்துறை மேம்பாடு : ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்க வர்த்தமானி பிரசுரம்

Monday, August 25th, 2025 at 7:55 (SLT)

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்த குழுவில் 28 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

Monday, August 25th, 2025 at 7:49 (SLT)

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரணிலின் கைது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம்

Sunday, August 24th, 2025 at 13:52 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழப்பு

Sunday, August 24th, 2025 at 13:49 (SLT)

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இப்படியெல்லாம் செய்யாதீர்கள்

Sunday, August 24th, 2025 at 13:47 (SLT)

மட்டக்களப்பில் தாய், தந்தையை இழந்த 18 வயது இளைஞனை தங்கவைத்து தமது பிள்ளையப் போல் வளர்த்து, படிக்கவைத்து, பராமரித்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணில் கைது, சந்திரிக்கா கவலை

Sunday, August 24th, 2025 at 13:45 (SLT)

ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

Saturday, August 23rd, 2025 at 7:04 (SLT)

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


செம்மணி அநியாயங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் : ரிஷாத் பதியுதீன்

Saturday, August 23rd, 2025 at 6:55 (SLT)

செம்மணியில் இடம்பெற்ற அநியாயங்களும் பாரிய அநியாயமாகும். அதனை யார் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று ஹஜ் கடமையை செய்துவிட்டு திரும்பிய மக்களின் ஜனாஸாக்கள் எங்கே அடக்கப்பட்டுள்ளார்கள் என தெரியாமல் குடும்பங்கள் இன்றும் கவலையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>