இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி பெறுமதியான சிகரெட் தொகை பறிமுதல்

Wednesday, August 27th, 2025 at 10:36 (SLT)

இலங்கைக்கு கடத்த முயன்ற, ஆறு கோடி இந்திய ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

மேலும் வாசிக்க >>>

மோட்டார் சைக்கிளில் சென்றவர் அடித்துக் கொலை

Wednesday, August 27th, 2025 at 10:33 (SLT)

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பாடசாலை வேனும், டிப்பரும் மோதி கோர விபத்து : மாணவர்கள் பலி

Wednesday, August 27th, 2025 at 10:30 (SLT)

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்

Wednesday, August 27th, 2025 at 10:26 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

Wednesday, August 27th, 2025 at 7:22 (SLT)

இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக ஒன்றிணையவில்லை : ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம் : பொதுஜன பெரமுன

Tuesday, August 26th, 2025 at 23:46 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இன்று ரணிலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம் : ஹிருணிகா பிரேமசந்திர

Tuesday, August 26th, 2025 at 23:43 (SLT)

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம். இது அரசியல் பழிவாங்கல் என்பதை உணர்ந்து கொண்டுள்ளதால் தான் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருக்கின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரசியல் செல்வாக்கின்றி நியமனம் : கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் சூழல் உருவானது : பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய

Tuesday, August 26th, 2025 at 10:44 (SLT)

எந்தவொரு அரசியல் செல்வாக்குமின்றி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமை குறித்துத் தான் மகிழ்ச்சியடைவதாகவும், அது தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சபாநாயகரிடம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் சிக்கல்

Tuesday, August 26th, 2025 at 10:39 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட நியமனம்

Tuesday, August 26th, 2025 at 10:36 (SLT)

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட இன்று செவ்வாய்க்கிழமை (26) நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, சீவலி அருக்கோட 45வது சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கிறார்.

மேலும் வாசிக்க >>>

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு 

Tuesday, August 26th, 2025 at 10:33 (SLT)

மாத்தறையில் கடற்கரைப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து நேற்று திங்கட்கிழமை (25) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உணவகத்தில் உரிமையாளர் காயமின்றி தப்பியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழப்பு

Tuesday, August 26th, 2025 at 10:21 (SLT)

காசாவில் உள்ள வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு : விசாரணை திகதி அறிவிப்பு

Monday, August 25th, 2025 at 19:32 (SLT)

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மனைவியை தூக்கிலிட்டு கணவன் தற்கொலை

Monday, August 25th, 2025 at 19:29 (SLT)

பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய ஆண் ஒருவர் தனது 69 வயதுடைய மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களது மகள் மற்றும் அவரது கணவர் இன்று (25) ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Monday, August 25th, 2025 at 12:30 (SLT)

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் தாரேகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>