பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் கூட்டணி தனித்து மான் சின்னத்தில் போட்டி : மணிவண்ணன்

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

6 வாரத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரயிலில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இவ்வாரத்திற்குள் வெளியிடப்படும்

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை,  தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாரத்திற்குள் வெளியிடும் என எதிர்ப்பாரப்பதாக பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் நாமல்

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைத் தடுக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.
எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எழுவைதீவு அனலைதீவு இடையே 197 கிலோ கஞ்சா மீட்பு

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கமைவாக எழுவை தீவு அனலை தீவு கடற்பரப்பில் பயணித்த படகொன்றினை
சோதனையிட்ட பொழுது 190 கிலோகிராம் 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும்

March 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானிய பிரதமரையும் சந்தித்த ஜெலென்ஸ்கி! சூடுபிடிக்கும் போர்க்களம்

March 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (01.03.2025) லண்டனில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை பெண்ணின் தாலி மீள ஒப்படைப்பு

March 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புனித ரமலான் நோன்பு காலம் இன்று முதல் ஆரம்பம்

March 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள். நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும் தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம் : நீதி அமைச்சர்

March 2nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வட, கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த திட்டமிடலுடன் புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும். தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம். வங்குரோத்து அரசியலுக்காக இனவாதம், மதவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் விஜயம்

March 2nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

March 2nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button