நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றமடைந்துள்ளோம் : பிரதமர் ஹரிணி அமரசூரிய

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எயிட்ஸ் நோய் கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த மனோபாவத்துடன் ஒப்பிடுகையில், இந்நோய் தொடர்பான சமூக மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றமடைந்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

December 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வயல்வௌியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

December 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹெட்டிபொல – வெடியேகெதர பிரதேசத்தில் வயல்வௌியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நெருக்கமானவர்களுக்கு உயர் பதவி : அநுர அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

December 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்குத் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்டாதீர்கள் : சிங்கள அரசியல்வாதிகளுக்கு அநுர அரசு தக்க பதிலடி

December 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ரேலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

November 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும்: கைத்தொழில் அமைச்சர் அறிவிப்பு

November 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அனைத்துப் பொருட்களில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படமாட்டாது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும்

November 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் இன்று நண்பகல் வேளையில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களுக்கு இடையாக ஊடறுத்து செல்லக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட தம்பலகாமம் பாலம் போட்டாறு கிராமத்துக்கு அமைச்சர்கள் குழு ஒன்று கண்காணிப்பு விஜயம்

November 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பாலம்போட்டாறு தி/விநாயகர் தமிழ் வித்தியாலயத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடை தங்கல் முகாமில் உள்ள மக்களை வெள்ளிக்கிழமை (30) அமைச்சர்கள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அனர்த்த கிராமிய மட்ட முன்னெடுப்புக்கள், நீர் வடிந்தோடக்கூடிய வழிவகைகள் தொடர்பிலும் இடைத் தங்கல் நிலையத்தில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் இதன் போது கேட்டறிந்து கொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சஜித் தரப்புக்குள் ஏற்பட்ட பிளவு தனிவழி செல்ல தயாராகும் பங்காளிக் கட்சிகள்

November 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நான் யாரிடமும் பணம் பெறவில்லை : மனுஷ

November 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அதுதொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது : அலி சப்ரி

November 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக்கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருகோணமலைக்கு சற்றுத்தொலைவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் இந்தியாவை நோக்கி நகருகின்றது

November 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில், இது வடக்கு – வடமேற்குத் திசையையினூடாக தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button