புலிகளின் தலைவர் பிரபாகரனை அவன் – இவன் என பேசிய கருணா : செல்வம் அடைக்கலநாதன்

என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை. கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும். வடக்கு, கிழக்கிலே மொட்டு சின்னத்திற்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டிருக்கிற சுயேட்சைக் குழுவில் இருக்கிற தமிழர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.
சிங்கள தேசத்தின் தலைவராக பேசிக் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழர்களாகிய நீங்கள் வாக்கெடுத்து கொடுக்கப் போகிறீர்களா என்பது எனது கேள்வி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply