சிவராத்திரியை முன்னிட்டு நிதியுதவி:பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

மஹா சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறு இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில், பிரதமரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சிவராத்திரி விரத நிகழ்வுகளை இந்து ஆலயங்களில் சிறப்பாக நடத்த உதவிகளை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மஹா சிவராத்திரி விரதத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply